
சென்னை: ‘தமிழகம் கல்வியில் பெற்றுள்ள எழுச்சியை, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் திரும்பி பார்க்கின்றன’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ‘கல்வியில் சிறந்த தமிழகம்’ கல்வி எழுச்சி கொண்டாட்ட விழா மற்றும் நடப்பு கல்வியாண்டுக்கான புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட அரசின் 7 திட்டங்களில் பயன்பெற்று, முக்கிய இடங்களில் பணியாற்றும் பயனாளிகள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் 2 லட்சத்து 65,318 பேர் பயன்பெறும் புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.