
சென்னை: துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார் தொடங்கி, ராஜகோபாலாச்சாரி வரை நாம் படிப்பதை தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.