
‘கட்சியின் பெயர், சின்னம் எல்லாம் எங்களுக்குத்தான், கட்சியின் நிர்வாகிகள் 90 சதவீதம் பேர் எங்களுடன்தான் இருக்கிறார்கள்’ என மிகவும் தெம்பாக பேச ஆரம்பித்திருக்கிறது அன்புமணி தரப்பு. அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறது ராமதாஸ் தரப்பு?
பாமகவில் தினமும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. தந்தை – மகன் இடையே தகிக்கும் அனலால் பாமக தினமும் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுக் கொண்டே இருக்கிறது. அதில் இன்றையச் செய்தி, பாமக சட்டப்பேரவை குழு தலைவராக இருந்த ஜி.கே.மணியை அந்தப் பதவியிருந்து நீக்கிவிட்டு, வெங்கடேஸ்வரனை நியமித்திருக்கிறது அன்புமணி தரப்பு.