
சென்னை: வள்ளி கும்மி கலைஞர் கே.கே.சி.பாலுவுக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு வெளியிட்ட அறிக்கையில், “கலை, இலக்கியம், சினிமா என பல்வேறு துறைகளில் சாதனை செய்த ஆளுமைகளுக்கு இந்த கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வரவேற்கக் கூடியது. தற்போது கிராமிய கலைகளுக்கான கலைமாமணி விருதுகளில் கிராமிய பாடகர்களுக்காக வீர சங்கரும், பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்காக காமாட்சியும், நையாண்டி மேள நாதஸ்வரத்துக்காக மருங்கன், பெரிய மேளத்துக்காக முனுசாமியும் கலைமாமணி விருது பெறுகின்றனர். விருதாளர்களுக்கு விசிகவின் வாழ்த்துகள்.