
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே ஏமப்பேர் ரவுண்டானாவில் உள்ள 5 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 46.30 கோடி ரூபாய் மதிப்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட வருகிறது. இதை எதிர்த்து, கள்ளக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்த குமரேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில், கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக எந்த ஓர் அறிவிப்பை மாவட்ட ஆட்சியரோ நகராட்சி ஆணையரோ வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.