
சென்னை: பாமக சட்டப்பேரவை குழுத் தலைவராக செயல்பட்டு வந்த ஜி.கே.மணியை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து, தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பாமக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் கே.பாலு, “பாமக சட்டப்பேரவை குழுத் தலைவராக செயல்பட்டு வந்த ஜி.கே.மணியை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து, தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பாமக சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத்தலைவராக மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல, பாமக சட்டப்பேரவை குழு கொறடாவாக மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.