
சென்னை: தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமான கல்வியை கற்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்று கொளத்தூர் தொகுதியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி விழாவில் பயிற்சி முடித்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
வடசென்னை பகுதியில் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிஎம்டிஏ சார்பில் முரசொலி மாறன் பூங்காவை ரூ.8.20 கோடி மதிப்பில் மறுசீரமைக்கும் பணி மற்றும் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.13 கோடியே 95 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் நேற்று அடிக்கல் நாட்டினார்.