
சென்னை: ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின்கீழ், பால் பொருட்களின் விலையை குறைக்காத ஆவின் நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜிஎஸ்டி கூடுதல் ஆணையரிடம் தமிழக பால் முகவர்கள் நலச் சங்கத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி (கவுன்சில்) அலுவலகத்தில், ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் லோகநாதன் ரெட்டியிடம் தமிழக பால் முகவர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி மற்றும் சங்க நிர்வாகிகள் நேற்று புகார் மனு அளித்தனர்.