
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தில் 71 நக்சலைட்கள் நேற்று சரணடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், நக்சல்களின் ஆதிக்கத்தை ஒடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக, சரணடையும் நக்சல்களின் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டி வருகிறது. அதேநேரம், 2026 மார்ச் மாதத்துக்குள் நக்சல்கள் ஆதிக்கத்தை ஒடுக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.