
மும்பை: மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஸ்வாங் தேசாய். இவரது நண்பர் ராஜேஷ் ராஜ்பால், அரிய வகை ஓவியங்களை விற்கும் ஆர்ட் இந்தியா இன்டர்நேஷனல் என்ற கடையை நடத்துகிறார். விஸ்வாங் தேசாய்க்கு தொழிலதிபர் புனீத் பாட்டியா வுடன் பழக்கம் ஏற்பட்டது.
ஓவியங்கள் சேகரிப்பில் தனக்கு 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளதாக கூறி, புனீத் பாட்டியாவை கலையில் முதலீடு செய்யும்படி தேசாய் தூண்டியுள்ளார். மத்தியப் பிரதேச மகாராஜா ஒருவர் வைத்திருந்த ஓவியங்கள் தனக்கு தெரிந்த ஒருவரிடம் உள்ளது எனவும் கூறியுள்ளார்.