• September 25, 2025
  • NewsEditor
  • 0

கரூர்: கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்​தில் தூய்​மைப் பணி மேற்​கொண்​ட​தாக தவெக​வினர் சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்​டிருந்த நிலை​யில், அப்​பள்​ளி​யின் தலைமை ஆசிரியை பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டார். கரூர் மாவட்​டம் தென்​னிலையில் அரசு மேல்​நிலைப் பள்ளி செயல்​பட்டு வரு​கிறது. கடந்த சில தினங்​களுக்கு முன்பு இப்​பள்​ளிக்கு வந்த சில இளைஞர்​கள், பள்ளி வளாகத்​தைச் சுத்​தம் செய்​வ​தாகக் கூறி​யுள்​ளனர். அதற்கு பள்​ளி​யின் தலைமை ஆசிரியை சுஜாதா சியாமளா ஒப்​புதல் அளித்​ததைத் தொடர்ந்​து, அவர்​கள் பொக்​லைன் இயந்​திரத்​துடன் வந்து பள்ளி வளாகத்​தைச் சுத்​தம் செய்​தனர்.

இதை வீடியோ​வாகப் பதிவு செய்த இளைஞர்​கள், தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் சுத்​தம் செய்து கொடுக்​கப்​பட்​ட​தாக சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டிருந்​தனர். அதில் பள்​ளித் தலைமை ஆசிரியை படமும் இடம் பெற்​றிருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *