• September 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக அரசின் மின்​துறை செயல​ராக இருந்த பீலா வெங்​கடேசன், உடல்​நலக் குறை​வால் பாதிக்​கப்​பட்ட நிலை​யில் கடந்த 2 மாதங்​களாக சென்னை கொட்​டி​வாக்​கத்​தில் உள்ள அவரது வீட்​டில் ஓய்​வில் இருந்து வந்​தார். இந்​நிலை​யில், நேற்று மாலை உடல்​நிலை மோசமடைந்து கால​மா​னார். அவருக்கு வயது 56.

கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தைச் சேர்ந்த பீலா வெங்​கடேசன், 1969-ம் நவ.11-ல் பிறந்​தார். தாயார் ராணி வெங்​கடேசன் சாத்​தான்​குளம் தொகு​தி​யின் முன்​னாள் காங்​கிரஸ் எம்​எல்​ஏ​வாக இருந்​துள்​ளார். தந்தை வெங்​கடேசன், தமிழக காவல்​துறை டிஜிபி​யாக பதவி வகித்து ஓய்வு பெற்​றவர். எம்​பிபிஎஸ் படித்​துள்ள பீலா வெங்​கடேசன், கடந்த 1997-ம் ஆண்டு ஐஏஎஸ் அதி​காரி​யா​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *