
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த ஐஏஎஸ் அதிகாரியின் ரூ.2.56 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மறைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தியானேஸ்வரன். இவர் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார்.
இவர், 1996-ம் ஆண்டு அதிமுகஆட்சியில், தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் (டாமின்) தலைவராக இருந்தார். அப்போது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தன் பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் சட்ட விரோதமாக சொத்துகளை வாங்கி குவித்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது.