
கூடலூர்: அதிமுக ஆட்சியில்தான் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். நீலகிரி மாவட்டம் கூடலூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடையே அவர் பேசியதாவது: கல்வியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்ததற்கு அதிமுகதான் காரணம். அதிமுக ஆட்சியில் ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன. உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கையை 54 சதவீதமாக உயர்த்தியது அதிமுக அரசுதான்.
கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியது அதிமுக ஆட்சியில்தான். திமுகவின் 4 ஆண்டு ஆட்சியில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியாவது கொண்டு வரப்பட்டதா ? அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தோம்.