
புதுடெல்லி: ரயில்வேயில் பணியாற்றும் 10.91 லட்சம் ஊழியர்களுக்கு, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரூ.1,866 கோடியை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தீபாவளி, தசரா, துர்கா பூஜை பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் போனஸ் வழங்கப்படும்.
இந்நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.