
பாட்னா: மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக 10 வாக்குறுதிகளை, பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி வெளியிட்டார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் நீட்டிக்கப்பட்ட செயற்குழுக் கூட்டம் பாட்னாவின் சதக்கத் ஆஸ்ரமத்தில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.