
சென்னை: காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்மல் மீது நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்கும் வகையில், விஜிலென்ஸ் பதிவாளர் தனது விசாரணை அறிக்கையை நிர்வாக குழுவுக்கு அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியின் பாதுகாவலராகப் பணியாற்றிவந்த காவல் துறையைச் சேர்ந்த லோகேஷ்வரன் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பூசிவாக்கம் பகுதியில் பேக்கரி நடத்தி வரும் லோகேஷ்வரனின் மாமனார் சிவக்குமாருக்கும், பேக்கரிக்கு வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலில் முடிந்தது.