
பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாப்பூர் மக்களவைத் தொகுதி பாஜக எம்பி சுதாகர் பெங்களூருவில் தனது மனைவி பிரீத்தி (40) மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி பிரீத்திக்கு வாட்ஸ் அப் மூலம் மும்பையை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். தன்னை மும்பை இணைய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி எனக் கூறிய அவர், ‘‘உங்களது எச்.டி.எஃப்.சி வங்கி கணக்கில் சட்டவிரோத நபர்களுடன் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது.
அதிலுள்ள பணத்தை உடனடியாக நாங்கள் கூறும் 'யெஸ் வங்கி' சோதனைக்கான வங்கிக் கணக்கில் மாற்ற வேண்டும். உடனடியாக மாற்றாவிடில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனைக்காக உங்களை கைது செய்வோம்'' என மிரட்டிள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரீத்தி உடனடியாக தன் வங்கி கணக்கில் இருந்த ரூ.14.26 லட்சத்தை, மர்ம நப‌ர் கூறிய வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளார்.