• September 24, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் சிக்​கப்​பள்​ளாப்​பூர் மக்​கள​வைத் தொகுதி பாஜக எம்பி சுதாகர் பெங்​களூரு​வில் தனது மனைவி பிரீத்தி (40) மற்​றும் 2 குழந்​தைகளு​டன் வசித்து வரு​கிறார். இந்​நிலை​யில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி பிரீத்​திக்கு வாட்ஸ் அப் மூலம் மும்​பையை சேர்ந்த மர்ம நபர் ஒரு​வர் தொடர்பு கொண்​டார். தன்னை மும்பை இணைய குற்​றப்​பிரிவு போலீஸ் அதி​காரி எனக் கூறிய அவர், ‘‘உங்​களது எச்​.டி.எஃப்​.சி வங்கி கணக்​கில் சட்​ட​விரோத நபர்​களு​டன் பணப் பரிவர்த்​தனை நடந்​துள்​ளது.

அதி​லுள்ள பணத்தை உடனடி​யாக நாங்​கள் கூறும் 'யெஸ் வங்​கி' சோதனைக்​கான வங்​கிக் கணக்​கில் மாற்ற வேண்​டும். உடனடி​யாக மாற்​றா​விடில் சட்ட விரோத பணப் பரிவர்த்​தனைக்​காக உங்​களை கைது செய்​வோம்'' என மிரட்​டிள்​ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரீத்தி உடனடி​யாக தன் வங்கி கணக்​கில் இருந்த ரூ.14.26 லட்​சத்​தை, மர்ம நப‌ர் கூறிய வங்கி கணக்​குக்கு மாற்​றி​யுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *