
சென்னை: தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையிலான பாலத்துக்கான எஃகு கட்டமைப்புகளின் தரச் சோதனை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் எந்தவித சமரசமும் செய்யப்பட மாட்டாது என்று தயாரிப்பிடத்தில் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.20 கி.மீ தூரத்துக்கு ரூ.621 கோடியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியை விரைவில், தரமான முறையில் நிறைவு செய்யும் வகையில், முன்னோக்கிய கட்டமைப்பு (Pre-fabricated) முறையில், 15 ஆயிரம் டன் எஃகுக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.