
சென்னை: சென்னையில் மறுசீரமைப்புக்குப் பிறகு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 4,071 ஆக உயர்ந்துள்ளதாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
ஒரு வாக்குச்சாவடியில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் அதை பிரித்து வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், ரிப்பன் கட்டிட அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.