• September 24, 2025
  • NewsEditor
  • 0

புனே: முன்னாள் வங்கி ஊழியரை, அவரது உறவினர் ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி செய்துள்ளார். இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் குரலில் மர்ம நபர்களையும் கான்பரன்ஸ் அழைப்பில் பேசவைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியர் சூர்யகாந்த் தோரட்(53). இவரை, அவரது உறவினர் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு தொடர்பு கொண்டு, தனது மகன் உளவுத்துறையில் பணியாற்றுவதாக கூறியுள்ளார். அத்துறையின் சிறப்பு திட்டத்தில் முக்கிய பங்காற்றியதால் தனது மகனுக்கு மத்திய அரசு ரூ.38 கோடி பரிசளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *