
புதுடெல்லி: வட மாநிலங்களில் நவராத்திரி நாட்களில் கர்பா, தாண்டியா எனும் கோலாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜ் நாயர் வெளியிட்ட அறிவிப்பில், “கர்பா என்பது வெறும் நடனம் அல்ல, தெய்வ வழிபாட்டின் ஒரு வடிவம். சிலை வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்கள் இவற்றில் பங்கேற்க உரிமை இல்லை. இதுபோன்ற நிகழ்வுகளில் இந்துக்கள் அல்லாதோர் இருப்பது எங்கள் மத உணர்வுகளை புண்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.