
ருத்ரபூர்: ரஷ்யாவில் படிக்கச் சென்ற உத்தராகண்ட் மாநில இளைஞர் ஒருவரை, ரஷ்ய ராணுவத்தில் சேர்த்து போர் முனைக்கு அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபூர் பகுதியிலுள்ள குஷ்மோத் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் குமார் (30). இவர் அண்மையில் ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் இணைந்து உயர்கல்வி பயில்வதற்காகச் சென்றார்.
ஆனால் அவரை ரஷ்ய ராணுவத்தினர் சிறைபிடித்து பயிற்சி அளித்து உக்ரைனுக்கு எதிராக போரிட போர்முனைக்கு அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக தனது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ள ராகேஷ் குமார், தன்னை மீட்க உதவுமாறு கோரியுள்ளார்.