
விருதுநகர்: ‘முதல்வர் எவ்வளவோ திட்டங்களை தீட்டினாலும், அவை மக்களைச் சென்றடைய அலுவலர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம்’ என்று துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் பேசியதாவது: மக்களை தேடிச் சென்று மனுக்களை பெற்று, அவற்றுக்கு விரைவாக தீர்வுகளை வழங்க வேண்டும். பொதுமக்களை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களுக்கு வரவழைக்கும் வகையில், உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கலைஞர் விளையாட்டு உபகரணங்களை அனைத்து ஊராட்சிகளுக்கும் விநியோகித்து, அவை பயன்படுத்துவதை உறுதிசெய்ய துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும்.