• September 23, 2025
  • NewsEditor
  • 0

ஈரோடு: நீலகிரி மாவட்டத்தில் பிரச்சாரம் கொள்வதற்காக சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியை புறக்கணிக்கும் வகையில் ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கிளம்பிச் சென்றார்.

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இன்று நீலகிரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக இன்று காலை சேலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி காரில் கிளம்பினார். ஈரோடு மாவட்டம் பவானி வழியாக கோபிச்செட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே வந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *