
சென்னை: தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பிஹார் மாநிலத்துக்கு சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பாட்னாவில் வாக்குத் திருட்டு பேரணியை ராகுல் காந்தி நடத்தி வந்தார். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க இருப்பதால் நான் பிஹார் மாநிலம் செல்கிறேன்.