
ஶ்ரீவில்லிபுத்தூர்: “10 யானைகள் சேர்ந்தாலும் திமுக என்ற ஆலமரத்தை சாய்க்க முடியாது. நேரு, ராஜாஜியை வென்ற திமுகவுக்கு இன்று தகுதியான எதிரிகள் இல்லை” என ஶ்ரீவில்லிபுத்தூரில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில், திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு முன்னிலை வகித்தனர்.