
நாமக்கல்: நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல கோழிப் பண்ணை உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் கோவை வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலை எம்.ஜி நகரைச் சேர்ந்தவர் பிரபல கோழிப் பண்ணை உரிமையாளர் வாங்கிலி சுப்பிரமணியம். இவர் நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் முட்டைக் கோழி மற்றும் பிராய்லர் கோழிப் பண்ணைகள் நடத்தி வருகிறார். மேலும், கோழித் தீவன ஆலை, கோழி குஞ்சு பொறிக்கும் ஹேச்சரீஸ், நிதி நிறுவனம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார்.