
மதுரை: திண்டுக்கல் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை பங்கேற்காத நிலையில், அவர் பெயரைச் சொல்லி கட்சியினர் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்ததால் நயினார் நாகேந்திரன் மற்றும் பிற தலைவர்கள் அதிருப்தியடைந்தனர்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தார். அதிமுக – பாஜக கூட்டணிக்காக அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் தலைவராக நியமிக்கப்பட்டார். நயினார் நாகேந்திரன் தலைவராகி பல மாதங்களுக்கு பிறகு, மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதில் அண்ணாமலை ஆதரவாளர்கள் பலருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன.