• September 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: “நாட்டில் இளைஞர்களின் வேலையின்மை என்பது பாரதிய ஜனதா கட்சி செய்யும் வாக்குத் திருட்டின் நேரடி விளைவு” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்தியாவில் இளைஞர்களுக்கு மிகப் பெரிய பிரச்சனை என்பது வேலையின்மைதான். அது, வாக்குத் திருட்டுடன் நேரடியாக தொடர்புடையது. எந்தவொரு அரசும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சிக்கு வரும்போது, ​​அதன் முதல் கடமை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதாக இருக்கும். ஆனால், பாஜக தேர்தல்களில் நேர்மையாக வெற்றி பெறுவதில்லை. அவர்கள் வாக்குகளைத் திருடியும், ஏஜென்சிகளை கைப்பற்றியும் ஆட்சியில் நீடிப்பார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *