
லக்னோ: "அனைவருக்கும் நன்றி. ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆசிர்வாதம்" என 2 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்துள்ள சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான் தெரிவித்துள்ளார்.
ஆசம் கானுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அந்த வழக்குகளுக்காக அவர் கைது செய்யப்பட்டார். ஒவ்வொரு வழக்கில் இருந்தும் ஜாமீன் பெற்ற ஆசம் கான், இறுதியாக குவாலிட்டி பார் (Quality Bar) நில ஆக்கிரமிப்பு வழக்கிலும் சமீபத்தில் ஜாமீன் பெற்றார். இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து ஆசம் கான், சீதாபூர் சிறையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டார்.