• September 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி மேட்​டூரில் இருந்து சென்​னைக்கு பாத​யாத்​திரை மேற்​கொண்ட அரசு மருத்​து​வர்​கள் சங்​கத் தலை​வர் டாக்​டர் பெரு​மாள் பிள்​ளை​யை, சென்​னை​யில் இருந்து நாகப்​பட்​டினத்​துக்கு பணி​யிட​மாறு​தல் செய்து பிறப்​பிக்​கப்​பட்ட உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை விதித்​துள்ள உயர் நீதி​மன்​றம், அவரை திரு​வள்​ளூருக்கு மாற்​றம் செய்ய உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​களில் நோயாளி​களின் எண்​ணிக்​கைக்​கேற்ப மருத்​து​வர்​களை​யும், செவிலியர்​களை​யும் நியமிக்க வேண்​டும். அரசு மருத்​து​வர்​களுக்கு அரசாணை 354-ன்​படி உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்​டும். கரோனா பேரிடரில் பணி​யாற்றி உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் விவே​கானந்​தனின் மனை​விக்கு அரசு வேலை வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக்​குழு தலை​வ​ரான டாக்​டர் பெருமாள் பிள்ளை தலை​மை​யில் அரசு மருத்​து​வர்​கள் கடந்த ஜூன் 11 முதல் ஜூன் 19 வரை சேலம் மேட்​டூரில் இருந்து சென்னை மெரி​னா​வில் உள்ள முன்​னாள் முதல்​வர் கருணாநிதி நினை​விடம் நோக்கி பாத​யாத்​திரை மேற்​கொண்​டனர். தேனாம்​பேட்டை வந்​த​போது, போலீ​ஸா​ரால்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *