• September 23, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: நெல்லையில் 1712-ம் ஆண்டில் அப்போதைய மதுரை சமஸ்தான ஆட்சியாளரால் வழங்கப்பட்ட செப்பு பட்டயம் அடிப்படையில் 1,100 ஏக்கர் நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என பள்ளி வாசல் நிர்வாகம் விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. செப்பு பட்டயம் அடிப்படையில் 2.34 ஏக்கர் நிலம் மட்டுமே பள்ளிவாசலுக்கு சொந்தம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நெல்லையில் 1,100 ஏக்கர் நிலத்துக்கு கண்டியப்பேரி கான்மியா பள்ளிவாசல் உரிமை கோரிய வழக்கில் பள்ளிவாசல் முத்தவல்லிக்கு ஆதரவாக 2016 ஆகஸ்ட் 16-ல் வக்பு தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, நெல்லை மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *