
புதுடெல்லி: அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த 2023-ல் குற்றம்சாட்டியது. இதனால், அதானி குழும பங்குகள் சரிந்தன.
இதுகுறித்து இந்திய பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) விசாரணை நடத்தியது. இரண்டு ஆண்டு விசாரணைக்குப் பிறகு, அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என கடந்த சில தினங்களுக்கு முன்பு செபி தெரிவித்தது.