
சென்னை: போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றியதாக திமுக ஆட்சியை கண்டித்து சட்டப்பேரவை தொகுதிவாரியாக 2 மாதம் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்போவதாக தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மற்றும் தமிழக பாஜக செயலாளர் வினோஜ் பி.செல்வம் ஆகியோர் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மக்களை எண்ணற்ற இன்னல்களுக்கு உள்ளாக்கியதோடு மட்டுமல்லாமல், மீண்டும் கவர்ச்சிகரமான போலி வாக்குறுதிகள், வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இரைப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலமாக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று திமுக கனவு காண்கிறது.