• September 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அமைச்​சர் துரை​முரு​கன் மற்​றும் அவரது மனை​விக்கு எதி​ரான சொத்​துக் குவிப்பு வழக்​கின் மறு​ வி​சா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்​துள்ள உச்ச நீதி​மன்​றம், இந்த மேல்​முறை​யீட்டு வழக்​கில் தமிழக அரசு பதில் அளிக்​க​வும் உத்தரவிட்டுள்​ளது. தமிழக நீர்​வளத் துறை அமைச்​சர் துரை​முரு​கன் கடந்த 2006-11 திமுக ஆட்​சி​யில் பொதுப்​பணித் துறை அமைச்​ச​ராக இருந்​தார்.

அப்​போது, 2007-09 கால​கட்​டத்​தில் வரு​மானத்​துக்குஅதி​க​மாக ரூ.1.40 கோடி அளவுக்கு சொத்​துக் குவிப்​பில் ஈடு​பட்​ட​தாக துரை​முரு​கன், அவரது மனைவி சாந்​தகு​மாரி மீது வேலூர் லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் கடந்த 2011-ம் ஆண்டு அதி​முக ஆட்​சி​யில் வழக்கு பதிவு செய்​தனர். இந்த வழக்​கில் இருந்து இரு​வரை​யும் விடு​வித்து வேலூர் முதன்மை அமர்வு நீதி​மன்​றம் கடந்த 2017-ம் ஆண்டு உத்​தர​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *