
சென்னை: தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் ரூ.100.82 கோடியில் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலைய புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் காலவாக்கத்தில் ரூ.21.85 கோடியில் கட்டப்பட உள்ள மாநில பயிற்சிக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.