
சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக, பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கார், ஆட்டோ என அனைத்து பொது போக்குவரத்திலும் ஒரே பயணச்சீட்டில் பயணிப்பதற்கான ‘சென்னை ஒன்’ என்ற மொபைல் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் (CUMTA) 2-வது ஆணையக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில், இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய ‘சென்னை ஒன்’ (CHENNAI ONE) மொபைல் செயலியை மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.