
சென்னை: தமிழக அரசின் ‘நான் முதல்வன்’, ‘புதுமைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ உள்ளிட்ட 7 திட்டங்கள் தொடர்பாக சென்னையில் செப்டம்பர் 25ம் தேதி நடைபெறும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ சிறப்பு நிகழ்வில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக தமிழக வருவாய்த் துறை செயலர் பி.அமுதா தெரிவித்தார்.
இந்த நிகழ்வு குறித்து தமிழக அரசின் ஊடகச் செயலரும், வருவாய்த் துறை செயலருமான பி.அமுதா இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் , செப்டம்பர் 25ம் தேதி ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற தமிழகத்தின் மாபெரும் கல்வி சாதனையின் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.