
மதுரை: தமிழகத்தில் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க தமிழ்நாடு பட்டாசு தொழில் கழகம் உருவாக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: “தமிழகத்தில் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 450 பதிவு செய்யப்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகள் மூலம் நேரடியாக 40 ஆயிரம் பேரும், மறைமுகமாக ஒரு லட்சம் பேரும் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் வெடி மருந்து சட்ட விதிகள் மற்றும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் விதிமுறைகளை பின்பற்றப்படுவதில்லை.