• September 22, 2025
  • NewsEditor
  • 0

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சாதிப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர காவல்துறை ஆவணங்களிலும், பொது இடங்களிலும் சாதி குறித்த குறிப்புகளை முழுமையாக தடை செய்து உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்த உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்த உத்தரப் பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக மாநில தலைமைச் செயலர் தீபக் குமார், அனைத்து துறைகளுக்கும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதன்படி முதல் தகவல் அறிக்கை, கைது மெமோ, காவல்துறை குறிப்புகள் ஆகியவற்றில் ஒருவரின் சாதியைக் குறிப்பிட முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதி பெயர்களுக்குப் பதிலாக சம்பந்தப்பட்டவரின் தந்தையின் பெயரை குறிப்பிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *