
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சாத்தியமற்றதை சாத்தியமாக்கி வருகிறார் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பின்னர் அவர் தனது முதல் பொது நிகழ்வில் கலந்துகொண்டார். புதுடெல்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உரைகளின் இரண்டு தொகுப்புகள் உள்ளடக்கிய 4 நூல்களை சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்