
சென்னை: குறுகிய அரசியல் பார்வையுடன் மும்மொழிக் கொள்கையை பிரச்னையாக்குவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற ‘தக் ஷின பதா’ மாநாட்டில் கலந்துகொண்ட தர்மேந்திர பிரதான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கல்வி நிதி விவகாரம் குறித்து 2 ஆண்டுகளாக பேசிவருகிறேன். மீண்டும் சொல்கிறேன். இந்த விவகாரத்தை தமிழக அரசு அரசியலாகவே பார்க்கிறது.
இது தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். தேசிய கல்விக் கொள்கையை நாடே ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் மதிய உணவு உட்பட பல்வேறு நலத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி வழங்கி வருகிறது. நடப்பாண்டு வரை தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வி சார்ந்த நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.