
வண்டலூர் அருகே மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் இருந்து வேங்கடமங்கலம் ஊராட்சி பகுதிக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஊராட்சியின் பல இடங்களில் இரவு நேரங்களில் குறைந்த மின் அழுத்த பிரச்சினை இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இதனால், குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, வாஷிங் மெஷின் போன்ற மின்சாதன பொருட்களை இயக்கும்போது பழுதடைந்து விடுகிறது. வேலைக்கு சென்று வீடு திரும்பும் மக்கள் இரவில் துாங்கமுடியாமல் அவதிப்படுகின்றனர்.