
சென்னை: இது சினிமாவுக்கான களம் அல்ல. விஜய்க்கு வரும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாது என மநீம தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் தொடர்பான மண்டல அளவிலான கலந்தாலோசனை கூட்டங்களை மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த செப்.18-ம் தேதி முதல் சென்னையில் நடத்தி வருகிறது.
அதன் தலைவர் கமல்ஹாசன் தலைமை வகித்து மண்டல வாரியாக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அந்தவகையில் கடந்த 18-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.