
ரபாட்: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் பகுதி 2 அல்லது பகுதி 3 ஆகியவை பாகிஸ்தானின் நடத்தையைப் பொறுத்து அமையும் என்றும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் இந்தியா சகிப்புத்தன்மை காட்டாது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார்.
நேற்று வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இந்தியர்களிடம் உரையாடிய ராஜ்நாத் சிங், “ஆபரேஷன் சிந்தூரின் பகுதி 2 அல்லது பகுதி 3 நடவடிக்கைகள் தேவையா என்பது குறித்து நாங்கள் சொல்ல முடியாது. அது பாகிஸ்தானின் நடத்தையைப் பொறுத்தது. அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும்.