
புதுடெல்லி: 2006 முதல் 2014 வரை ஜிஎஸ்டியை எதிர்த்த ஒரே மாநில முதல்வர் நரேந்திர மோடிதான் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், ஜிஎஸ்டி முதன்முறையாக ஜூலை 2017ல் அமல்படுத்தப்பட்டது. அப்போது இந்த வரி முறையை ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் கப்பர் சிங் வரி (பாலிவுட் படமான ஷோலேவில் வரும் புகழ்பெற்ற கதாபாத்திரம்) என்று விமர்சித்தது. இந்த வரி முறை நல்லதோ அல்லது எளிமையானதோ அல்ல. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நமது பொருளாதாரத்துக்கு இது அதிர்ச்சியாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர்கள் 8 ஆண்டுகளாக எங்களை நம்பவில்லை. எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என விமர்சித்தார்.