
புதுடெல்லி: அருணாசல பிரதேசம், திரிபுரா மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.22) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் ரூ.5,100 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 22-ல் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது இரு மாநிலங்களிலும் ரூ.5,100 கோடிக்கும் அதிகமான பல மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.