• September 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தூத்​துக்​குடி​யில் கப்​பல் கட்​டும் தளங்​கள் அமைய இருப்​பது தென் தமிழக வளர்ச்​சிக்கு புதி​யதொரு அடித்​தள​மாக இருக்​கும் என்று முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார். தூத்​துக்​குடி​யில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்​டில், கப்​பல் கட்​டும் தளங்​கள் அமைக்க கொச்​சின் ஷிப்​யார்டு (சிஎஸ்​எல்) மற்​றும் மசகான் டாக் ஷிப் பில்​டர்ஸ் நிறுவனங்களு​டன் ஒப்​பந்​தம் செய்​யப்பட்​டுள்​ள​தாக தொழில் துறை அமைச்​சர் டிஆர்​பி. ராஜா தெரிவித்தார்.

இதன்​மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்​றும் அவர் குறிப்​பிட்டிருந்​தார். இந்த செய்​தியை தனது சமூக வலைதள பக்​கத்​தில் குறிப்​பிட்​டுள்ள முதல்​வர் ஸ்டா​லின், ‘கப்​பற்​கலை​யில் தமிழரின் பெரு​மைமிகு வரலாற்றை சங்​கப் பாடல்​கள் சொல்​லும். தற்​போது தூத்​துக்​குடி​யில் 55 ஆயிரம் பேர் வேலை​ பெறும் வகை​யில் 2 கப்​பல் கட்​டும் தளங்​கள் அமைய உள்​ளன. தென் தமிழக வளர்ச்​சிக்கு இது அடித்​தள​மாக அமை​யும்’ என கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *