
சென்னை: “மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்கவில்லை. குறுகிய அரசியல் பார்வையை கொண்டவர்கள் மட்டுமே மும்மொழிக் கொள்கையை சர்ச்சையாக மாற்றுகிறார்கள்” என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான்: கல்வி நிதி விவகாரம் குறித்து தொடர்ந்து நான் பேசி வருகிறேன். இந்த விஷயத்தை தமிழக அரசு அரசியல் விவகாரமாக பார்க்கிறது. இது குறித்து நான் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளேன். தேசிய கல்விக் கொள்கையை நாடே ஏற்றுக்கொண்டது. நாம் அனைவரும் அதை பின்பற்ற வேண்டும். உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தில், மாணவர்கள் விரும்பினால் இந்தி, ஆங்கிலம், மராத்தி அல்லது தமிழைத் தேர்வு செய்யலாம்.